Friday, March 27, 2009

ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார் வில்லனாக நடிக்கும் ஆர்யா

சென்னை, மார்ச். 18-

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த பின் ஆர்யா சம்பளத்தை உயர்த்திவிட்டார். ரூ.2 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது திரிஷாவுடன் நடித்து வரும் “சர்வம்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மதராசபட்டினம் என்ற படத்திலும் நடிக்கிறார்.

இதற்கிடையில் தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நான் கடவுள் படம் தெலுங்கில் “நாணு தேவுடு” என்ற பெயரில் டப்பிங் ஆகியுள்ளது. இதையடுத்து தெலுங்கு திரையுலகில் ஆர்யாவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அல்லு அர்ஜுன் கதா நாயகனாக நடிக்கும் படமொன்றில் வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டுள்ளார். வருகிற 21-ந்தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. இப்படத்துக்கு ஆர்யா கணிசமான தொகை சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டதால் நடிக்க சம்மதித்து உள்ளாராம்.

0 comments:

Post a Comment

சினிமா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates