Friday, March 27, 2009

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? -தமன்னா


சென்னை, மார்ச். 27-
கேடி, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படங்களில் நடித்தவர் தமன்னா. படிக்காதவன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது சூர்யா ஜோடியாக அயன் படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த தாண்டவம், பரத்ஜோடியாக கண்டேன் காதலை, கார்த்தி ஜோடியாக பையா என மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.
இதில் பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. சம்பள பிரச்சினையால் நயன்தாரா நடிக்க மறுத்து ஒதுக்கினார். உடனே தமன்னா அப்படத்தை தட்டி பறித்துக்கொண்டார். குறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதித்து இந்த வாய்ப்பை பெற்றார். இதனால் நயன்தாராவின் கோபத்துக்கு ஆளாகி இருப்பதாக செய்தி பரவியுள்ளது.
இது போல் விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் உதறினார். விஜய் தற்போது வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்குதான் தமன்னாவை அழைத்ததாக கூறப்படுகிறது. அவர் மறுத்ததால் அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுபற்றி தமன்னாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நயன்தாரா நடிக்க மறுத்ததால்தான் பையா படத்தில் நடிக்கிறேன் எனக்கு ஒரு சென்டி மென்ட் உண்டு. அதாவது மற்றவர்கள் தவறவிட்ட வாய்ப்புகள் எனக்கு அதிர்ஷ்டமாக மாறி உள்ளன. அந்த வகையில் நயன்தாராவிடம் இருந்து கைநழுவிய வாய்ப்புதான் பையா படம். அது சூப்பர் ஹிட் படமாக அமையும் என்பது சந்தேகம் இல்லை.
விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மை தான். ஆனால் நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருடன் நடிக்க இயலவில்லை. அந்த வாய்ப்பு நழுவி போய்விட்டது. ஆனாலும் மீண்டும் அவருடன் நடிக்க சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

சினிமா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates